இலங்கை
பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது – பாதுகாப்பு செயலாளர்
பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னமேலும் படிக்க...
மக்களின் போராட்டத்தினை முடக்கும் நோக்கில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தயாராகின்றது அரசாங்கம்?
நாட்டில் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவியை விலகுமாறு கோரி நாளை மறுதினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமேலும் படிக்க...
கொழும்பில் பௌத்த பிக்குகள் குழு ஆர்ப்பாட்டம்
கொழும்பு – புறக்கோட்டையில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு இதன்போது பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனம் இன்று சைக்கிள் அணிவகுப்பு போராட்டத்தைமேலும் படிக்க...
இலங்கைக்கு உதவும் எண்ணம் எம்.சி.சி.க்கு இல்லை – அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்தது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர்மேலும் படிக்க...
மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை
மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது. அமைச்சரையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய இதற்கான இணக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த யோசனையை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். ஏற்கனவே 2018ஆம் ஆண்டு மட்டக்களப்புமேலும் படிக்க...
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் – ஜனாதிபதி
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்மேலும் படிக்க...
இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை வழங்குகின்றது ஜப்பான்
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பானியத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள்மேலும் படிக்க...
நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்
நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார். தற்போதைய பொருளாதாரநெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துமேலும் படிக்க...
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த வருட இறுதிக்குள்மேலும் படிக்க...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் கமல் குணரத்ன ஆஜர்
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி இன்றுமேலும் படிக்க...
பாடசாலை மாணவர்கள் இடை விலகும் அபாயம் அதிகரித்து உள்ளதாக கவலை
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.மேலும் படிக்க...
பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் – சிறிசேன
மகாசங்கத்தின் வழிகாட்டுதலின்படி கூடிய விரைவில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
நோர்வே வெளி விவகார அமைச்சின் தெற்காசிய பிரதிப் பணிப்பாளரை சந்தித்து பேசினார் சாணக்கியன்!
நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவிற்கான பிரதிப் பணிப்பாளருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துரையாடியுள்ளார். இரா.சாணக்கியன் நோர்வேக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி குறித்தும்மேலும் படிக்க...
IMF உதவியைப் பெற இலங்கை இவற்றை செய்ய வேண்டும் – அமெரிக்கா
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது. அதன்படி முதலில் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும்மேலும் படிக்க...
புகையிரத தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமத்தின் காரணமாக இன்று நண்பகல் முதல் தொழிங்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில்,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- …
- 256
- மேலும் படிக்க