இலங்கை
கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்றமேலும் படிக்க...
ரணிலை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை எதிர்ப்பு நாளாக பிரகடனம் – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் முகமாக எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன்மேலும் படிக்க...
எரிபொருள் விலை திருத்தம் : முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 100 ரூபாய் என்ற முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை குறைக்காமல் இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 90 ரூபாயாக குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
பொருளாதார வங்குரோத்து நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பொய் கூற முடியாது – சஜித்
நாடு எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்து நிலையில் மக்களுக்கு திடீரென நிவாரணம் வழங்கப்படும் என பொய் கூற முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரஜைகள் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்றுமேலும் படிக்க...
பதில் ஜனாதிபதி ரணிலின் முக்கிய அறிவிப்பு
அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ‘இந்த நாட்டை’மேலும் படிக்க...
இலங்கை வந்து பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவுக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் அழைப்பு!
அமெரிக்கா, இலங்கை வந்து இங்குள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.மேலும் படிக்க...
போராட்டக் காரர்களுக்கும், கிளர்ச்சிக் காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது – பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், ” நாம் வாழ்வதற்கும்,மேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என மஹிந்தவும், பசிலும் அறிவிப்பு
மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் எஸ்.ஆர். ஆட்டிகல உள்ளிட்டோருக்கு வெளிநாடு செல்ல தடைமேலும் படிக்க...
ஜனாதிபதியாக சஜித்தும் பிரதமராக அனுர குமாரவும் நியமிக்கப்பட வேண்டும்
சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
அனைத்து தரப்பினரும் இணக்கப் பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து
அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் சமாதானமான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில்மேலும் படிக்க...
ரணில் விக்கிரம சிங்கவிற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் – வெளியானது வர்த்தமானி
ஜனாதிபதியின் அதிகாரங்களை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) முதல் அமுலுக்கும் வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும்மேலும் படிக்க...
நாடாளு மன்றத்தினை நோக்கி நகரும் போராட்டக் காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைமேலும் படிக்க...
ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர் ரணில் பதவி விலக வேண்டும் என ஏகமனதாக தீர்மானம்!
ஜனாதிபதியின் இராஜினாமா அமுலுக்கு வருவதற்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த்மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கையில்மேலும் படிக்க...
ரணில் என்ற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், மக்களையும் பலி கொடுக்க வேண்டாம் – அநுர
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்கிற தனிமனிதரின் பதவிப் பேராசைக்காக நாட்டையும், நாட்டு மக்களையும் பலிகொடுக்க வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். போராட்டக்காரர்களைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- …
- 256
- மேலும் படிக்க