இலங்கை
தமிழ் கட்சிகள் மஹிந்த பெற்று கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை : காமினி லொக்குகே
தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும் என்பதோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகேமேலும் படிக்க...
சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்கு உட்படுத்த ஆளுநர் பணிப்பு
வடமாகாண சுகாதார சேவைகள் துறையை மீளாய்வுக்கு உட்படுத்தி வினைத்திறனுடன் செயற்பட வைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்எம்.சாள்ஸ் பணித்துள்ளார். வட மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வட மாகாண பிரதம செயலாளர், சுகாதாரமேலும் படிக்க...
வட்டவளை பகுதியில் விபத்து – 12 பேர் காயம்!
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வட்டவளை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 04.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்தில் 100 பேர் வரை பயணித்துள்ளதுடன்மேலும் படிக்க...
காரைநகர் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி
காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது தாக்குதல் முயற்சி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்துமேலும் படிக்க...
கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. வருடாந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு பல குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நியூஸ் ரேடியோவிற்கு தெரிவித்தார்.மேலும் படிக்க...
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை
வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை செய்து தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்குமேலும் படிக்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார் வினய் மோகன் குவத்ரா
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒருபகுதியாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் மோகன் குவத்ரா இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும்மேலும் படிக்க...
1 பில்லியன் டொலர்களை நெருங்குகிறது 2023 இல் சுற்றுலா வருவாய்
2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.மேலும் படிக்க...
மருத்துவத்துறைக்கு இரத்ததானம் மூலம் பங்களிப்புச் செய்ய வேண்டும் : வடமாகாண ஆளுநர்
மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து இரத்ததானம் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்மேலும் படிக்க...
500 மில்லியன் டொலர் : உலக வங்கியுடன் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
500 மில்லியன் டொலர் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதியை வழங்குவது தொடர்பில் இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது. உலக வங்கியிடமிருந்து இலங்கைக்குமேலும் படிக்க...
அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரப்பகிர்வு : ஜனாதிபதி ரணில் உறுதி
வடக்கு மாகாணசபைக்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள ஏனைய மாகாணசபைகளும் உள்ளடங்கலாக மேலதிக அதிகாரப் பரவலாக்கம் குறித்துப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐரோப்பிய விஜயத்தின் போது பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ்,மேலும் படிக்க...
ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை -ஜனாதிபதி ரணில்
”ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை” என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். இணையவழி மூலம் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் சேவை இன்று முதல் நாட்டில் நடைமுறைக்குமேலும் படிக்க...
ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகள் மக்களையே பாதிக்கும் : ரிஷாட் பதியுதீன்
பொருளாதார வீழ்ச்சிக்கான அடிப்படைப் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறு ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள்மேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி
ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள்மேலும் படிக்க...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு பொலிஸார் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குமேலும் படிக்க...
மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைவதற்குத் தயார் : ஐக்கிய மக்கள் சக்தி
மக்கள் ஆணை கிடைக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தாம் தயாராகவே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவரும்மேலும் படிக்க...
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலுக்கான அழைப்பு
தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தலின் போது அரசியல் கட்சிகள் எவ்வித அரசியல் பேதமுமின்றி பங்கேற்க வேண்டுமென நினைவேந்தல் குழு அழைப்பு விடுத்துள்ளது. தியாகி பொன் சிவகுமாரின் 49வது ஆண்டு நினைவேந்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் நினைவேந்தல் குழுவினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் நாடாளுமன்றத்திற்கு திடீர் விஜயம்
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் julie chung தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலானமேலும் படிக்க...
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
கிழக்கு மாகாணத்தில் 16 ஆயிரத்து 700 குடும்பங்கள் மின்சார வசதியற்ற நிலையில் தொடர்ச்சியாக வாழ்ந்துவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிழக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 256
- மேலும் படிக்க