Main Menu

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள்! – வஜிர அபேவர்தன

அநுர, சஜித் போன்ற சிறு பிள்ளைகள் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் பயணத்தில் இணைந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, பிட்டகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனதா விமுக்தி பெரமுனவும் நாட்டின் ஆட்சிக்கு பங்களித்த கட்சி என்று தெரிவித்த வஜிர அபேவர்தன, அந்த ஆட்சியின்போது பெற்ற கடனை ரணில் விக்கிரமசிங்க தற்போது செலுத்தி வருவதாகவும் கூறினார்.

அவர் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் உலக நாடுகளிடம் பெற்ற தவறான கடன்களை அவர்கள் செலுத்தி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

பகிரவும்...