Main Menu

நீண்ட தூர பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் திருடும் கும்பல் தொடர்பில் வெளியான தகவல்!

தமிழ், சிங்கள புத்தாண்டு முன்னிட்டு நீண்ட தூர பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பெறுமதியான பொருட்களைத் திருடும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் ,பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.ப

பதுளை – கொழும்பு நோக்கி செல்லும் நீண்ட தூர பஸ் சேவைகளில் இந்த திருட்டு சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திருட்டு கும்பல் விடுமுறைக்காக ஊருக்குச் செல்லும் சக பயணிகளாக தங்களைக் காண்பித்து  பயணிகளின் பெறுமதியான பொருட்களைத் திருடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும்...