Main Menu

ரஷ்ய ஆடைத் தொழிற்சாலை பணிபுரியும் இலங்கையர்களுக்கு சம்பளம் வழங்கப் படுவதில்லை என குற்றச்சாட்டு

ரஷ்யாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி இந்த ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ய தங்களை அனுப்பியதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சுமார் 180 இலங்கையர்கள் தற்போது அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

தங்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...