Main Menu

சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு

முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.

இதனிடையே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடமிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுரேஷ் சலே தொடர்பான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

23 பக்கங்கள் கொண்ட உத்தரவை அறிவித்த கோட்டை பிரதம நீதவான் பசன் அமரசேன, சுரேஷ் சலே எழுதுவதற்காக எழுதுகருவிகள் மற்றும் ஆவணங்களை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்தார்.

அத்துடன் இரகசிய வாக்குமூலத்திற்காக சலே, முன்வைத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

சுரேஷ் சலேவை இதன்பின்னர் காணொளி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.