Day: July 1, 2026
முதல்வர் விஜய் தலைமையில் தவெக தோழமை கட்சிகள் இன்று ஆலோசனை கூட்டம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்காது

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத் தில் இன்று நடைபெறுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின்மேலும் படிக்க...
“தவெக கூட்டணியில் உள்ளது மதிமுக; இனி எல்லாமே வெற்றிதான்” – வைகோ உற்சாகம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதியில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை பார்வையிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ‘‘சீமைக்கருவேலமேலும் படிக்க...
யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள்மேலும் படிக்க...
உலக கடல்களில் வரலாறு காணாத வெப்பம்: ஜூன் மாதம் அதிக வெப்பநிலை பதிவு

உலகின் கடல்கள் இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிக வெப்பமான ஜூன் மாதத்தை சந்தித்துள்ளதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus Marine Service வெளியிட்ட தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாகமேலும் படிக்க...
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, செவ்வாய்க்கிழமை (30) அன்று நிலக்கரி வர்த்தகம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி, சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த வாக்குமூலம் ஒன்றை அளித்தார். இதன்போது, நிலக்கரி கொள்முதல் மற்றும் அது தொடர்பானமேலும் படிக்க...
கட்டார் எயார்வேஸ் எடுத்த முடிவு – இன்று முதல் மீள ஆரம்பம்

கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது வானூர்தி சேவைகளை இன்று (01) முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது. இதன்படி, தினசரி 5 வானூர்தி சேவைகள் என்ற அடிப்படையில் வாராந்தம் மொத்தம் 35 வானூர்தி சேவைகளை பண்டாரநாயக்க சர்வதேசமேலும் படிக்க...
சுகீஸ்வர பண்டார ஜூலை 08 வரை விளக்கமறியலில்

இன்று காலை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஸ்வர பண்டார, வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் பொலிஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கை மற்றும் முதற்கட்டமேலும் படிக்க...
பிரான்ஸ் மற்றும் நோர்வே அணிகள் இறுதி 16 சுற்றுக்குத் தகுதி

கிலியன் எம்பாப்பேயின் அதிவிசேட திறமையின் உதவியுடன், பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதி 32 அணிகள் சுற்றில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்ஸ் அணி 3க்கு 0மேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்-திற்கான தேசிய சபை கூடியது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கூடியது. பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான அநுர கருணாதிலக,; தம்மிக படபெந்தி, சுசில் ரணசிங்க, ஹர்ஷன நாணயக்கார உள்ளிட்ட பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின்மேலும் படிக்க...
ராஜஸ்தானில் லொறி – பேருந்து மோதி விபத்து – 8பேர் உயிரிழப்பு – 20 பேர் படுகாயம்

ராஜஸ்தானில் லொறி மீது பேருந்து மோதி ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நோக்கி பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. ராஜஸ்தானின் தவுசா அருகே டில்லி-மும்பை விரைவுச்சாலையில்மேலும் படிக்க...
சாலே தனது உண்ணாவிரதத்தை கைவிட முடிவு?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தமது சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு: அமைச்சர் உறுதி

இலங்கையின் மீன்பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத இழுவைமடித் தொழிலைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டமூலங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், சிறிய படகுகளுக்குமேலும் படிக்க...
