Main Menu

உக்ரேனில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது!

உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 638பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில், இதுவரை ஐந்தாயிரத்து 673பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 766பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். மேலும், 66பேர் உயிரிழந்தனர்.

தற்போதுவரை ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 476பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 26ஆயிரத்து 489பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...