Main Menu

பொதுபல சேனாவைத் தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பும் கலைக்கப்படும் என அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசர்களுக்கு பின்னர் நாட்டிற்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ள காரணத்தினால் இனிமேல் தேசத்தைப் பாதுகாக்க தேசிய அமைப்புகள் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடிய விரைவில் புதிய நாடாளுமன்றத்தை அமைத்து நாட்டை அபிவிருத்த செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறும் ஜனாதிபதியிடமும் எதிர்க்கட்சி தலைவரிடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களது குழுவிலும் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அடுத்து பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...