Main Menu

நியுசிலாந்தில் கோர விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு!

நியுசிலாந்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரொட்டோருவா நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் அதிகளவான சீனர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பேருந்து விபத்துக்குள்ளான போது அதில் 25 பேர் பயணித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது காயமடைந்தவர்கள் உலங்கு வானூர்திகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...