Main Menu

75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி – ஹர்தீப் சிங் புரி

இந்தியாவில் 75 சதவீத விமான சேவைகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் குறிப்பிடுகையில், “ உள்நாட்டு விமானப் மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களில் தொடா்ந்து அதிகரித்தால்  75 சதவீதம் வரை விமான சேவைகளை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளுக்குக் கடந்த மாா்ச் மாத இறுதியில் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் கடந்த மே மாதம் 25-ஆம் திகதி முதல் அனுமதி  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...