Main Menu

30 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கு கொரோனா பிரதான காரணம் அல்ல – ஹேமந்த ஹேரத்

கொரோனா தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்டவர்களின் மரணத்திற்கு கொரோனா தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் சிறுவயது முதலே நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறு மரணிப்பவர்களுக்கு சிறுநீரக நோய் மற்றும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்கள் மரணத்துக்கான பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...