Main Menu

ஐ.நா. அமர்வு – ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளை மறுதினம் ஜெனிவாவுக்கு பயணம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள விசேட பிரதிநிதிகள் குழு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவே இவ்வாறு ஜெனிவா நோக்கி பயணிக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை குறித்த அறிக்கையை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

குறித்த அறிக்கை ஏற்கனவே, இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எதிர்வரும் வியாழக்கிழமை அதற்கான பதிலளித்து உரையாற்றவுள்ளார்.

பகிரவும்...