Main Menu

23 இலட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 77 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமையஇ நேற்றைய தினத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 552 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 13 இலட்சத்து 60 ஆயிரத்து 336 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 63 ஆயிரத்து 596 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 294 பேருக்கு கொவிசீல்ட்  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 3 இலட்சத்து 56 ஆயிரத்து 232 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 64 ஆயிரத்து 986 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...