Day: May 9, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 291 (09/05/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல் கவிஞர் மாளிகையில் இடம்பெற்றது. இதில் 33 அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், கொரோனா நிலவரம், ஒக்சிஜன்மேலும் படிக்க...
இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள் பரவல்!
இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட பிரார்த்தனைகள்!
தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலைமேலும் படிக்க...
பரிஸ் : வளர்ப்பு நாய்க்குட்டியை அடித்துக் கொன்றவர் கைது
எட்டுமாத வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்றை அடித்துக்கொண்ட ஒருவர் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue Oscar-Roty வீதியில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.30 மணி அளவில்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் முக்கிய அணையை தலீபான்கள் பிடித்தனர்
அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தஹ்லா என்ற அணை உள்ளது. இதை 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கட்டிக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய அணை இது.மேலும் படிக்க...
நியூயார்க்கில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – சிறுமி உள்பட3 பேர் காயம்
நியூயார்க் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். மர்ம நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் 4மேலும் படிக்க...
ஜெருசலேமில் பயங்கர கலவரம் – 205 பாலஸ்தீனியர்கள் படுகாயம்
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடும்பங்களை பலவந்தமாக மீண்டும் குடியமர்த்துவதற்கு இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும்மேலும் படிக்க...
கவர்னர் மாளிகையில் நாளை உறுதிமொழி – தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியை தற்காலிக பேரவை தலைவராக கவர்னர் நியமித்துள்ளார். தமிழக சட்டபேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக சட்ட சபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கீழ்பெண்ணாத்தூர் தொகுதிமேலும் படிக்க...
சீன ராக்கெட்டின் எச்சங்கள் இலங்கை இந்தியப் பெருங்கடலில்
சீன விண்வெளி நிலையத்தின் முதலாவது ராக்கெட் தொகுதியான லாங் மார்ச் -5 பி ராக்கெட்டின் எச்சங்கள் தற்போது இந்தியாவின் தென்மேற்கு பகுதி மற்றும் இலங்கை இந்தியப் பெருங்கடலில் தரையிறக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சுமார் 22 டன் எடைக்கொண்ட இந்தமேலும் படிக்க...
முக ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதல் கூட்டதொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கில் 3-வது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கில் ஸ்டாலின் தலைமையிலான 16-வது சட்டசபையின் முதல் கூட்டதொடர் நடைபெறுகிறது. தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நாளை மறுநாள் (11-ந் தேதி) சட்டசபையின் முதல்மேலும் படிக்க...
ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
ஐதராபாத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஐதராபாத் கல்வாரி கிறிஸ்தவ தேவாலயம்ஐதராபாத்,இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை பெருகிமேலும் படிக்க...
இலங்கையில் மேலும் 21 கிராமங்கள் இன்று முடக்கம் – இராணுவ தளபதி அறிவிப்பு
நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட டோலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இலுபகந்த, பொத்துபிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும்மேலும் படிக்க...
கொரோனா தனிமைப் படுத்தல் மையங்களாக தேவாலயங்களை வழங்க தேசிய கிறிஸ்தவ மன்றம் தீர்மானம்
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் அதிகரிப்புடன் ஏற்பட்டுள்ள சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை என்பவற்றை நிவர்த்தி செய்ய தமது தேவாலயங்கள் மற்றும் கட்டடங்களைத் தனிமைப்படுத்தல் மையங்களாகப் பயன்படுத்த முடியும் என்று இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
யாழில் உயிரை மாய்த்து கொண்ட கணவன் – மனைவி
குழந்தை பிறந்து 18 நாட்களில் உயிரிழந்த நிலையில் சோகம் தாங்க முடியாத குழந்தையின் தாய் மற்றும் தந்தை உயிரை மாய்த்த சோக சம்பவம் யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது-34), அவரது துணைவிமேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் – அமரர்.திரு.பிரான்சிஸ் சேவியர் மரியாம்பிள்ளை (09/05/2021)
தாயகத்தில் யாழ்ப்பாணம் மடத்தடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொண்டிருந்தவரும் யாழ் பத்திரிசிரியார் கல்லூரி பழைய மாணவனும் இலங்கை நீர் வழங்கல் திணைக்கள உயர் அதிகாரியும் பிரான்ஸ் புனர் வாழ்வுக் கழக முன்னாள் தலைவருமான திரு.மேலும் படிக்க...