Main Menu

கொரோனாவில் இருந்து மீள நாடு முழுவதும் விசேட பிரார்த்தனைகள்!

தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமதப் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, மலையக ஆலயங்களிலும் பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் கொரோனா பிடியிலிருந்து விடுபட விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் ம.ஜெயகாந்த் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

உலக நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமான வாழ்வு மலர உலக மக்களின் நன்மைக்காகவும் இலங்கை வாழ் மக்களின் நன்மைக்காகவும் பிராத்தனை இடம்பெற்றுள்ளது.

பகிரவும்...