Main Menu

இலங்கையில் ஐந்து கொரோனா வைரஸ் திரிபுகள் பரவல்!

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகல், கண்டி, பொலன்னறுவை, மன்னார் மாவட்டங்களில் சில பகதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பி.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்தில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கையில் திரிபடைந்த வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேசத்தல் நைஜீரியாவில் பரவும் வைரஸ் திரிபு அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதனைவிட, கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தென்னாபிரிக்க வைரஸ் திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...