பரிஸ் : வளர்ப்பு நாய்க்குட்டியை அடித்துக் கொன்றவர் கைது
எட்டுமாத வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்றை அடித்துக்கொண்ட ஒருவர் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. பரிஸ் 15 ஆம் வட்டாரத்தின் rue Oscar-Roty வீதியில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 12.30 மணி அளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து வந்தனர். “தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் நாய் அலரும் சத்தம் கேட்டது’ என பக்கத்து வீட்டினர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். குறித்த வீட்டில் எட்டு மாதங்கள் கொண்ட வளர்ப்பு நாய் ஒன்று இரத்தம் தோய்ந்தி சாவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உரிமையாளர் குறித்த நாயினை மிக மோசமாக தாக்கி படுகொலை செய்துள்ளார். உனடியாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணைகளில், குறித்த நாய் தமது மின்சார சிகரெட்டின் மின்கலத்தை (Battery) ஐ கடித்து துப்பியதால் அதை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர் தெரிவித்திருந்தார். சாவடைந்த நாய் பிரித்தானியாவைச் சேர்ந்த வேட்டை நாய் வகையைச் சேந்தது என்பது குறிப்பிடத்தக்கது.