Day: September 24, 2020
இஸ்ரேலில் இதுவரை இல்லாத நாளொன்றுக்கான அதிக பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!
இஸ்ரேலில் இதுவரை இல்லாத அளவுக்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இஸ்ரேலில், 11ஆயிரத்து 316பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்சமேலும் படிக்க...
பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மத்திய சிறையிலுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள்மேலும் படிக்க...
20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சுதந்திரக் கட்சி அறிவிப்பு
அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறித்துள்ளது. அதேநேரம், அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவிகளையோ, ஏனைய பதவிகளையோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்பார்க்கவில்லைமேலும் படிக்க...
பா து கலே : சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 பேர் கைது
பா து கலே கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 அகதிகள் நேற்றைய நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு படகுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 88 அகதிகள் பா து கலே கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்றைய நாளில் 393மேலும் படிக்க...
OM அணி வீரர் மீது எச்சில் துப்பிய விவகாரம்! – PSG வீரருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை
OM அணி வீரர் ஒருவர் மீது எச்சில் துப்பிய காரணத்தினால் பரிசின் PSG அணி வீரர் ஒருவருக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது PSG அணிக்காக விளையாடிவரும் அர்ஜண்டினா நாட்டைச் சேர்ந்த Angel Di Maria இற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம்!
வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரேலில் இருந்து பஹ்ரைன் நாட்டிற்கு முதல் நேரடி விமானம் சென்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து நேற்று (புதன்கிழமை) இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான விமானம் பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் நேற்று பஹ்ரைன் நாட்டை வந்தடைந்தது.மேலும் படிக்க...
அமேசான் காடுகள் தொடர்பாகப் பல தவறான தகவல்கள் பரப்பப் படுகின்றன: பிரேஸில் ஜனாதிபதி!
உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்ஸனாரோ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் இணையம் வழியாகப் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்தமேலும் படிக்க...
ஐரோப்பாவில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பிரான்ஸ்- ஸ்பெயினில் உச்ச பாதிப்பு!
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இரண்டாவது தொற்றலையாக பார்க்கப்படும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால், ஸ்பெயினில் மட்டும் கடந்த 24மணித்தியாலத்தில் 11ஆயிரத்து 289பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
மகாராஷ்டிரா கட்டட விபத்து : உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டட தொகுதியொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. 36 ஆண்டுகள் பழமையான குறித்த கட்டட தொகுதி திங்கட்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் 62 பேர்மேலும் படிக்க...
விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேலும் படிக்க...
தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொலை!
தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘மிருகத்தனமான செயல்’ என பாதுகாப்பு அமைச்சகம் கண்டித்துள்ளது. எல்லைக்கு அருகிலுள்ள ரோந்துமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவாக நடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவாக வவுனியாவிலிருந்து நல்லூர் வரையிலான நடை பயணத்தினை ஏற்பாடுசெய்தவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மன்றில் அறிக்கை செய்வதற்காக நடைபயணத்தை ஏற்பாடு செய்த வவுனியா நகரசபை உறுப்பினர் பி.ஜானுஜன் மற்றும் நாடாளுமன்றமேலும் படிக்க...
ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்தமேலும் படிக்க...
நீதிமன்றத் தடையை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம், ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு!
எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், காலைமேலும் படிக்க...