Main Menu

மகாராஷ்டிரா கட்டட விபத்து : உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி பகுதியில் 3 மாடி குடியிருப்பு கட்டட தொகுதியொன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  41  ஆக அதிகரித்துள்ளது.

36 ஆண்டுகள் பழமையான குறித்த கட்டட தொகுதி திங்கட்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது. இதில் 62 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது.

முதற்கட்டமாக 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக முன்னெடுக்க மீட்பு பணியில் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழப்புகளின எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...