Main Menu

பா து கலே : சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 பேர் கைது

பா து கலே கடற்பிராந்தியத்தில் சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 88 அகதிகள் நேற்றைய நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பல்வேறு படகுகளில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 88 அகதிகள் பா து கலே கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அதேவேளை நேற்றைய நாளில் 393 அகதிகள் பிரித்தானிய கடல் எல்லையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அவர்கள் அனைவரும் பிரான்சில் இருந்து சென்றவர்கள் என அறிய முடிகிறது.  பா து கலே கடற்பிராந்தியத்தில் இரவோடு இரவாக ஆறு தடவைகள் ஜொந்தாமினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். 

பகிரவும்...