Day: August 1, 2020
48 மணிநேரத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் தற்கொலை
கடந்த 48 மணிநேரத்துக்குள்ளாக இரண்டாவது காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார். Strasbourg (Bah-Rhin) காவல்நிலையத்தில் பணிபுரியும் 26 வயதுடைய அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த காவல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிகின்றார். அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகலின்மேலும் படிக்க...
சனக் கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து – 13 பேர் காயம்
மகிழுந்து ஒன்று சனத்திரள் நிறைந்த பகுதி ஒன்றுக்குள் பாய்ந்துள்ளது. இதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Vinzelles (Saône-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மதுபான விடுதி ஒன்றின் முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீதே மகிழுந்து பாய்ந்துள்ளது. இதில் மொத்தமாக 13மேலும் படிக்க...
டிக் டொக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்கா திட்டம்!
அமெரிக்காவில் சீனாவின் டிக் டொக் (Tik Tok) செயலியைத் தடைசெய்ய ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்துவரும் நிலையில் அதனை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசொப்ற் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனம், மைக்ரோசொப்ற், வெள்ளை மாளிகைமேலும் படிக்க...
முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரரொருவருக்கு கொவிட்-19 தொற்று!
பர்முலா-1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடைபெறும் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி பந்தயத்திலிருந்து விலகியுள்ளார். முதல்முறையாக பர்முலா-1 கார்பந்தய வீரர் கொரோனாவில் சிக்கி இருந்தாலும் பிரிட்டிஷ்மேலும் படிக்க...
ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் போட்டிகளை, நேரில் பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது. அமீரகத்தில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கும் 30 முதல் 50 சதவீதம் பேர் போட்டியை காண அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கியமேலும் படிக்க...
பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது!
இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாகவும் இந்து கடவுள்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகவும் கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சிமேலும் படிக்க...
போர்த்துக்கலில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழப்பு- 30பேர் காயம்
போர்த்துகீசிய மாவட்டமான கோயம்ப்ராவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர். குறித்த ரயில், கோயம்ப்ரா மற்றும் போர்டோ நகரங்களில் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களுடன், லிஸ்பனில் இருந்து பிராகாவுக்கு வடக்கே பயணித்துக் கொண்டிருந்த போது, சோரே நகரில் ஒருமேலும் படிக்க...
கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முதன் முறையாக தடை விதிப்பு!
முதன் முறையாக, சீனா, ரஷ்யா, வட கொரியாவைச் சேர்ந்த கணினி இணைய ஊடுருவிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. இணையதளம் மூலம் ஊடுருவி, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ஆறு பேர் மற்றும் மூன்று குழுக்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டமேலும் படிக்க...
உலக பிரபலங்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவிய பிரித்தானிய இளைஞன்!
அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் ருவிற்றர் கணக்குகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பாக பிரித்தானியாவின் பொக்னர் ரெஜிஸ் (Bognor Regis) பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மெசன் ஷெப்பர்ட் (Mason Sheppard) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாத இறுதியில்மேலும் படிக்க...
விசாகப் பட்டினத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புமேலும் படிக்க...
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் பேருக்கு அரசு உதவ வேண்டும் – கமல்ஹாசன்
கொரோனா தொற்றினை அடுத்து அமுலில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் தொழிலாளர்களுக்கு அரசுஅவர்களுக்கு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மார்ச் 24 முதல் ஓகஸ்ட் 31 வரை 4 மாதங்கள் முடிந்துமேலும் படிக்க...
இலங்கையில் அரசியல் சாசனமே இல்லை: இதுவொரு தோல்வி அடைந்த நாடு- சம்பந்தன்
இலங்கையின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத் தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல் சாசனம் இல்லை எனவும் அந்தவகையில் இலங்கை ஒருமேலும் படிக்க...
முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லசாமி காலமானார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி அவரது 95 ஆவது வயதில் இன்று (சனிக்கிழமை) காலமானார். எம்.எஸ் செல்லசாமி மூத்த வயது காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1926-12-11ஆம் திகதி தலவாக்கலை,மேலும் படிக்க...
கூட்டமைப்பை தோற்கடித்து புலிகளின் அரசியல் பலத்தை அடியோடு வேரறுத்து விட்டோம் என்பதை கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் அடியோடு வேரறுத்துவிட்டோம் என்பதைக்கூற ராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர் என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் காலத்தின் தேவை கருதி உருவாக்கப்பட்ட தமிழ்மேலும் படிக்க...