Main Menu

48 மணிநேரத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் தற்கொலை

கடந்த 48 மணிநேரத்துக்குள்ளாக இரண்டாவது காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  Strasbourg (Bah-Rhin) காவல்நிலையத்தில் பணிபுரியும் 26 வயதுடைய அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த காவல்நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து பணிபுரிகின்றார். அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நண்பகலின் போது தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இவ்வருடத்தில் இடம்பெறும் 32 ஆவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இது எனவும், கடந்த 48 மணிநேரத்தில் இடம்பெறும் இரண்டாவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...