Main Menu

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் பேருக்கு அரசு உதவ வேண்டும் – கமல்ஹாசன்

கொரோனா தொற்றினை அடுத்து அமுலில் உள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 20 இலட்சம் தொழிலாளர்களுக்கு அரசுஅவர்களுக்கு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மார்ச் 24 முதல் ஓகஸ்ட் 31 வரை 4 மாதங்கள் முடிந்து 5 ஆவது மாதமாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் பலரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வாடி நிற்கும் நிலை காணப்படுகின்றது.

மூடிக்கிடக்கும் தொழில் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்துக்குத் தடை, இ-பாஸ் சிக்கல், வேலையின்மை எனக் கடுமையான பாதிப்பைப் பலரும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “புகைப்படக் கலைஞர்கள், டாக்ஸி / வேன் ஓட்டுநர் என 20 லட்சம் பேர் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

கடன் கட்ட அவகாசம் தந்து விட்டு, அதற்கும் வட்டி போட்டு சுமையேற்றப்படுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களைக் காக்க எம் தொழிலாளரணி முனைந்துள்ளது. அரசின் உதவியும் அவசியம்” என பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...