Main Menu

சனக் கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து – 13 பேர் காயம்

மகிழுந்து ஒன்று சனத்திரள் நிறைந்த பகுதி ஒன்றுக்குள் பாய்ந்துள்ளது. இதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.  நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Vinzelles (Saône-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள மதுபான விடுதி ஒன்றின் முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீதே மகிழுந்து பாய்ந்துள்ளது. இதில் மொத்தமாக 13 பேர் காயமடைந்துள்ளனர்.  சாரதி மது அருந்திருந்தியிருந்ததாக அறிய முடிகிறது. சம்பவத்தை தொடர்ந்து சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு போராடி வருகின்றனர். மேலும் மூவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.  இது தொடர்பான விசாரணைகளை Mâcon பிராந்திய காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

பகிரவும்...