Day: April 7, 2020
ஐரோப்பியப் பாராளுமன்றம் கொரோனாப் பரிசோதனை மையமாகிறது
ஸ்ரார்ஸ்பேர்க்கிலுள்ள ஐரோப்பியப் பாராளுமன்றக் கட்டடம், கொரோனா நோய்ப் பரிசோதனை மையமாகவும் (centre de dépistage), COVID19 மருத்துவ ஆலோசனை மையமாகவும் இயங்க உள்ளதாக, ஐரோப்பிய விவகாரங்களிற்கான பிரெஞ்சு அரசின் செயலாளர் அமெலி-து-மொன்சலான் (Amélie de Montchalin) தெரிவித்துள்ளார். ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் தற்போதையமேலும் படிக்க...
தேவையான காலம் வரை உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படும் – சுகாதார அமைச்சர்!
தேவைப்படும் காலம்வரை உள்ளிருப்புக் கட்டுப்பாடு (confinement) நீட்டிக்கப்படும் என சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சரான ஒலிவியே வெரொன் தெரிவித்துள்ளார். “நாங்கள் கொரோனாத் தாக்குதலின் உச்சத்தினை இன்னும் அடையவில்லை. அதனால் உள்ளிருப்பிலிருந்து வெளியேறுவது பற்றி, இப்போதைக்குக் கதைப்பது அவசியமற்றது. எனக்குப் பிரெஞ்சு மக்களின் பொறுமையற்றதனம்மேலும் படிக்க...
ஜப்பானில் அவசரகால நிலை பிரகடனம்
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு ஜப்பானில் நாடளாவிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ மற்றும் ஆறு மாவட்டங்களை உள்ளடங்கலாக அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் 44 வீதமானவர்கள் வாழும்மேலும் படிக்க...
ஆபிரிக்க மக்கள் மீது கொரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது- உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்குப் பரிசோதித்துப் பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, இனவெறி பிடித்துள்ளமேலும் படிக்க...
இந்தியர்களின் தேவையைத் தாண்டியே மருந்து ஏற்றுமதி இருக்க வேண்டும்- ராகுல் வலியுறுத்து
இந்தியர்களின் தேவைகளுக்கு கையிருப்பை வைத்துவிட்டே ஏனைய நாடுகளுக்கு மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “நட்பு என்பது பதிலடிமேலும் படிக்க...
ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு!
அமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிமேலும் படிக்க...
அடுத்த வாரங்களில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல: GMOA
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள்மேலும் படிக்க...
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 6 இராணுவ வீரர்கள் காயம்
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ நுழைவாயிலுக்கருகில் நேற்று திங்கட்கிழமை இராணுவத்தினரின் கெப் வாகனமொன்று மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்தின்மேலும் படிக்க...
அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி
ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசியமேலும் படிக்க...
பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு உறுப்பினர்கள் கைது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம்மேலும் படிக்க...
ஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்
ஸ்பெயினில் கொரோனாவை இல்லாதொழிக்க அந்நாட்டு காற்பந்து வீரர் சாவி ஹெனண்டர்ஸ் ஒரு மில்லியன் யூரோவை அந்நாட்டு கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் பிரபல காற்பந்து வீரர் லியனோல் மெசீ மற்றும் டெனிஸ் வீரர் ரெபாயல் நடால் உள்ளிட்டமேலும் படிக்க...
இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம்
கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதமர், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டனில்மேலும் படிக்க...
சவூதி அரேபியாவின் பல்வேறு நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத் தலைநகர் உட்பட பல நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, தபுக், தம்மாம், டஹரன், அல்-ஹொஃபுல், ஜேடா,மேலும் படிக்க...
பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்- நிபுணர்கள் குழு
கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு பரிசோதனை நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என விடயத்துடன் தொடர்புடைய நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்கு தொடர்ச்சியான பரிசோதனைகள் அவசியமாகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திடம் பரிந்துரைகள் முன்வைத்தமேலும் படிக்க...