Main Menu

நள்ளிரவு முதல் உணவகங்கள், அருந்தகங்கள்,திரையரங்குகளை மூடுமாறு பிரதமர் பணிப்பு

பிரான்சில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள் (restaurants), அருந்தகங்கள் (café -Bar), திரையரங்குகள் என அனைத்தும் உடனாடியாக இன்று நள்ளிரவுடன் மூடப்படல் வேண்டும் எனப், பிரதமர் எதுவார் பிலிப் (edouard philippe) அதிரடியான உத்ததரவை வழங்கி, மக்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாக இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைக்குமாறும் கோரி உள்ளார்.

ஆனால் அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகள், வங்கிகள், மருந்தகங்கள், போன்ற சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் எனப் பிரதமர் அறிவித்துள்ளார்.

பகிரவும்...