ஆர்ஜென்டினாவுக்-காக மேலும் 2 கோல்கள்; வரலாறு படைத்தார் மெஸ்ஸி
கோல் அடிப்பது மற்றும் சாதனைகளை முறியடிப்பது லியோனல் மெஸ்ஸியின் இயல்பு; தனது ஆறாவது கால்பந்து உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் அதை மீண்டும் செய்து வருகிறார்.
டெக்ஸாயின் டல்லாஸில் திங்களன்று (22) நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண ஆட்டம் ஒன்றில் ஆர்ஜென்டினா அணி ஆஸ்திரியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி நாக்-அவுட் சுற்றில் தனது இடத்தை உறுதி செய்தது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் நம்பமுடியாத வகையில் பெனால்டி வாய்ப்பு நழுவவிடப்பட்ட நிலையில், அரை மணி நேரத்திற்குப் பின்னர் தியாகோ அல்மாடா வழங்கிய பந்தை மெஸ்ஸி நேரடியாக உதைத்து கோலாக மாற்றி, இத்தொடரின் வரலாற்றில் இடம்பிடித்தார்.
எக்காலத்திற்குமான மிகச்சிறந்த வீரராகப் பலராலும் கருதப்படும் மெஸ்ஸி, திங்களன்று ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற உதவிய இரண்டு கோல்களையும் அடித்தார்.
இதன் மூலம் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது.
முன்னதாக, இத்தொடரில் அவர் அடித்த தனது முதல் ‘ஹாட்ரிக்’ (hat-trick) கோல்கள், உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸின் சாதனையை அவருக்குச் சமமாக்கியிருந்தன.
அதே திங்களன்று, ஈராக் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது, கைலியன் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து க்ளோஸின் 16 கோல்கள் என்ற சாதனையைச் சமன் செய்தார்.
ஆஸ்திரியாவுக்கு எதிரான முதல் கோல், மெஸ்ஸியின் 39 ஆவது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, 38 ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது.
அதுவும், வீட்டில் உடல்நலம் குன்றியிருந்த அவரது தந்தையின் கவலைக்கு மத்தியில் இது நிகழ்ந்தது.
மெஸ்ஸியின் இந்த சாதனையுடன் ஆர்ஜென்டினா தனது முதல் இரண்டு ‘குழு J’ ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியமையும் குறிப்பிடத்தக்கது.
