Main Menu

104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய நேற்றைய ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது ஆட்டநேர முடிவில், பென் ஸ்டோர்க் 16 ஓட்டங்களுடனும், பட்லர் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இதற்கமைய இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுகள் கைவசம் உள்ள நிலையில் 104 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 14ஆம் திகதி லண்டன் – லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், மழையின் குறுக்கீடு காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக தடைப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களையும், அவுஸ்ரேலிய அணி 250 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

பகிரவும்...