Main Menu

தற்போதைய ஆட்சியாளர்களின் பெயர் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் – தினகரன்

தற்போது ஆட்சியில் இருப்பவர்களின் பெயர் வருங்கால சரித்திரத்தில் கறுப்பு பட்டியலில் இடம்பெறும் என அ.ம.மு.கவின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.

தஞ்சை சுவாமிமலையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தங்களின் ஆட்சியை காப்பாற்றிக்கொள்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்படு வருகின்றனர்.

இவர்களின் ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்படும் சூழலே காணப்படுகின்றது. தமிழ்நாட்டு வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...