Main Menu

ஹைதராபாத் என்கவுண்டரில் கொலை செய்யப் பட்டவர்களின் மறு பிரேத பரிசோதனை நிறைவு!

ஹைதராபாத் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் உடலும்,  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் குழுவால் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இதற்கு  மருத்துவர்கள் யாரும்  பங்கேற்பதற்கு அழைக்கபடவில்லை எனவும், முழுவதுமாக டெல்லி குழுவினர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த முழு பிரேத பரிசோதனையும் காணொலியாக  பதிவு செய்யப்பட்டு,  தெலுங்கான உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்கப்பட உள்ளது.

அத்துடன் குறித்த மறுபிரேத பரிசோதனைக்கு பின்னர் நால்வரது உடல்களும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதலாவதாக மஹபூப்நகர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 4 உடல்களும்,  அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...