குடியுரிமை திருத்த சட்டம் : புதுவையிலும் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்துடன் 27ஆம் திகதி காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.