Main Menu

ஸ்கொற்லாந்தில் கத்திக் குத்துத் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்!

ஸ்கொற்லாந்தின் கிளாஸ்கோ நகர மத்தியில் உள்ள விடுதி வாளாகத்தில் கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றநிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்

இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஸ்கொற்லாந்து பொலிஸார், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்தத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் காணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து மேற்கு ஜோர்ஜ் தெருவிலுள்ள பார்க் விடுதியின் வெளியில் ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் உண்மையிலேயே பயங்கரமானது எனவும், கவலைக்குரியது என்றும் நகர முதல்வர் நிக்கோலா ஸ்டேர்ஜன் (Nicola Sturgeon) தெரிவித்துள்ளார்.

பகிரவும்...