Main Menu

வெசாக் தினத்தன்று வெறிச்சோடி காணப்படும் விகாரைகள்

கொரோனா தொற்றுநோய் பரவலால் அரசாங்கம் விதித்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பெரும்பாலான விகாரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வெசாக் தினமான இன்று (புதன்கிழமை) விகாரைகளில் அனைத்து மத நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் யாரும் விகாரைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பெல்லன்வில ரஜ மஹா விஹாரயா, பொரலெஸ்கமுவ விகாரை உள்ளிட்ட பல விகாரைகள் இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்படுகின்றன.

பகிரவும்...