Main Menu

வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்!

வவுனியா குளத்துபகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்று உரிமைக்கோரப்பட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில் வவுனியா நகரசபையே வவுனியாக்குளத்தை கூறுபோட்டு விற்காதே,நீர்பாசன திணைக்களமே குளத்தை காப்பாற்ற வேண்டியவர்களே ஆக்கிரமிப்பிற்கு துணைபோவதா,நிலத்தடி நீருக்கும் நெல் உற்பத்திக்கும் ஆப்புவைப்பதா அபிவிருத்தி,போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...