Main Menu

வவுனியாவில் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கோர விபத்து : பலர் படுகாயம்

வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12) காலை 7.30 மணியளவில் பயணிகள் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேருந்தும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

இந்த விபத்தில் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பலர் படுகாயமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பகிரவும்...