Main Menu

லாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவருடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஞ்சியிலுள்ள  ராஜேந்திரா வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளமையினால் அவரால் உணவு உட்கொள்வதும் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த 2017ஆம் ஆண்டில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவின் அரசியல் எதிர்காலம் 71 வயதில் நிச்சயமற்ற நிலையை தற்போது எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...