Main Menu

ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 54ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் 54ஆயிரத்து 9பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு இரண்டாயிரத்து 432பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 823பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 19பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 23ஆயிரத்து 827பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 419பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர 27ஆயிரத்து 750பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...