தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களித்துள்ளேன் – இரா.சாணக்கியன்
தமிழ்த் தேசியத்திற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்காகவும் தாம் வாக்களித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் இன்று காலை மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இரா.சாணக்கியன் வாக்களித்தார்.
இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்வது ஆசனத்திற்கான வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 54ஆயிரத்தை கடந்தது!