Main Menu

ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை

ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்த செய்திகளை வெளியிட்டமைக்காக மியன்மாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

33 வயதான வா லோன் மற்றும் 29 வயதான க்யாவ் சோ ஆகிய இருவரும், அந்த நாட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 500 தினங்களுக்கு மேலாக அவர்கள் யாங்கொன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதிகார இரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான அவர்களுக்கு 7 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மியன்மாரின் ஜனநாயகம் குறித்து விமர்சனங்கள் எழுந்ததுடன், ஊடக சுதந்திரம் மீதான அடக்குமுறை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பகிரவும்...