Main Menu

யாழ். மாவட்ட மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்றனர்-மைத்திரி குணரத்ன

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கட்சி நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிலரே யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் செயற்பட்டனர் ஆனால் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை முழுவதும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...