முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்!
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் (வயது-69) இன்று மாரடைப்பால் காலமானார்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாகக் கொண்டவர்.
வவுனியாவில் வசித்து வந்த இவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு! முந்தைய செய்திகள்