Main Menu

இருபதை ஆதரிப்பவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப் படுவார்கள் – ஐக்கிய மக்கள் சக்தி

20வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) காலை நடந்த கட்சிக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலருடன் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் இரகசியப் பேரங்களை நடத்தியதாக வெளியான தகவல்களையடுத்தே இந்த முடிவை இன்று காலை அவசரமாகக் கூடிய கட்சி எடுத்துள்ளது.

இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவைத் தெரிவித்து வாக்களிக்கவுள்ளதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...