Main Menu

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் (State of Global Air) வெளியிட்ட அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 1 இலட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் காற்று மாசுபாடு காரணமாகப்  உயிரிழந்துள்ளனர்.  காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகளாக உள்ளனர்.

மேலும் 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் காற்று மாசுபாடு காரணமாகப் உயிரிழந்துள்ளனர். உயர் இரத்த அழுத்தம், புகையிலைப் பயன்பாட்டுக்கு அடுத்து அதிக அளவிலான காற்று மாசுபாட்டால் ஏற்படுகிறது.

இந்தியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா, தெற்காசியா போன்ற நாடுகளிலும் காற்று மாசு காரணமாக குழந்தைகளின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...