Main Menu

முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நேற்று (15) காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரையான காலப்பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசந்தர ஆகியோர் கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

பகிரவும்...