Main Menu

முதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.

தமிழக முதல்வரையும் தன்னையும் பிரிக்க முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, அண்ணாவின் மொழிக்கொள்கைதான் எங்களது மொழிக்கொள்கை

அந்தவகையில் இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை.

ஆகையால் இவ்விடயத்தில் தமிழகம் எந்நிலையிலும் பின்வாங்காது. இருமொழிக்கொள்கையை நிச்சயம் பாதுகாக்கப்படும்.

இதேவேளை  எனக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. ஆகையால் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாகவே இருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...