Main Menu

முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதா? – கிரண்பேடி

முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னையும் அரசியலமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகையையும், அனைத்து தரக்குறைவான வார்த்தைகளிலும் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துவிட்டதாகவும், அந்த மின்னஞ்சலில் கிரண்பேடி கூறியுள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் கூறி  வருவதாகவும், இது கடந்த சில நாட்களாக நல்லொழுக்கம், கண்ணியம், நாகரிகம் என்ற எல்லைகளை கடந்து செல்வதாகவும் துணைநிலை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வசைகளை எதிராளி ஏற்காவிட்டால் அது வசைபாடுபவரையே சாரும் என புத்தர் கூறியுள்ளதாகவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...