Main Menu

மாவீரர் தின ஏற்பாடுகளை மேற்கொண்ட த. தே. ம. முன்னணியின் முல்லைத்தீவு அமைப்பாளர் கைதாகி விடுதலை

மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளை முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு, முள்ளியவாய்க்கால் பகுதியில் மாவீரர் தினத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் ஏற்பாட்டுக் குழுவால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கு சென்ற பொலிசாரும், புலனாய்வு துறையினரும் சிவப்பு, மஞ்சள் கொடிகளை கட்ட வேண்டாம் எனவும் மாவீரர் தின ஏற்பாடுகளை கைவிடுமாறும் வலியுறுத்தினர்.

அத்துடன் அங்கு அலங்கார வேலைகளுக்காக கொண்டு வரப்பட்ட கொடிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த பொலிசார் மாவீரர் தின ஏற்பாட்டில் ஈடுபட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளரை கைது செய்து கொண்டு சென்றனர்.

பின்னர் பொலிசில் வாக்குமூலங்களை பெற்ற பின்னர் குறித்த நபரையும் பொருட்களையும் விடுவித்துள்ளனர். 

அத்துடன் கொடிகள், பதாதைகள் கட்டாது அமைதியாக நினைவு கூறுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...