Main Menu

கண்ணீர் காணிக்கைக்கு தயாராகும் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லங்கள்

கிளிநொச்சியில் உள்ள  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம் என்பன  2019 மாவீரர் நாளுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

நடந்துமுடிந்த போராட்டத்தில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2009 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2016 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் அனுஸ்டிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 2019 மாவீரர் நாள் ஏற்பாடுகள் ஒவ்வொரு துயிலுமில்லங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறே கிளிநொச்சியில் உள்ள அனைத்து  மாவீரர் துயிலுமில்லங்களிலும்  அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர்துயிலுமில்ல  பணிக்குழு   அறிவித்துள்ளது 

பகிரவும்...